Skip to content
Centre for War Victims and Human Rights
Centre for War Victims and Human Rights

Protecting War Victims and Promoting Human Rights

  • Vision & Mission
  • Our Teams
  • Contact Us
  • FAQ
  • Support Us
Centre for War Victims and Human Rights
Centre for War Victims and Human Rights

Protecting War Victims and Promoting Human Rights

எழிலன் உள்ளிட்டோரின் வழக்கு – சிறப்பு நீதவான் முன்னிலையில்

Posted on September 27, 2023September 27, 2023 By Admin

இலங்கையில் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எழிலனின் மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வழக்காளிகள் இந்த வழக்கு விசாரணைக்காக அங்கு சென்றிருந்தனர்.இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கணேசராஜா, அந்த விசாரணைகளை வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அவர்களை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுகின்ற பல நபர்கள் புகைப்படங்கள் எடுத்ததுடன், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உள்ள முக்கிய சந்திகளில் ஆங்காங்கே காவல் இருந்து தம்மை அச்சுறுத்தும் வகைளில் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இவ்வாறான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அப்பால் உள்ள வள்ளிபுனம் வரைக்கும் தொடர்ந்ததால், தாங்கள் மீண்டும் புதுக்குடியிருப்பு நகருக்குத் திரும்பி வந்து காவல்துறையினரிடம் முறையிட்டு பின்னர் யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு காவல்துறையினரின் வழிப்பாதுகாப்பைப் பெற்றுச் சென்றதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.

தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் தொடரவிடாமல் நிறுத்தும் வகையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே விசாரணைகள் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Uncategorized

Post navigation

Previous post
Next post

Related Posts

Sri Lanka’s Authoritarian Turn: The Need for International Action

Posted on September 27, 2023

Feb 2013 EXECUTIVE SUMMARY AND RECOMMENDATIONS Government attacks on the judiciary and political dissent have accelerated Sri Lanka’s authoritarian turn and threaten long-term stability and peace. The government’s politically motivated impeachment of the chief justice reveals both its intolerance of dissent and the weakness of the political opposition. By incapacitating…

Read More

The UN’s ‘grave failure’ in Sri Lanka demands an Answer

Posted on September 27, 2023

FRANCES HARRISON THE GLOBE AND MAIL Last updated Friday, Nov. 16 2012, 4:37 PM EST It’s been called Ban Ki-moon’s Rwanda moment: a little-reported war three years ago on a tiny Indian Ocean island where tens of thousands of civilians were slaughtered, waiting for the United Nations to come and…

Read More

Sri Lanka: New Evidence of Wartime Abuses – Human Right Watch

Posted on October 2, 2023October 2, 2023

Government Inquiry Inadequate; UN Should Establish International Investigation May 20, 2010 A member of the LTTE apparently captured by the Sri Lankan Air Mobile Brigade. In subsequent photos (downloadable via links below), the man appears to be dead, raising concerns that he might have been executed in custody. © 2009…

Read More

Leave a Reply

You must be logged in to post a comment.

Follow Us

  • Twitter
  • Facebook
  • YouTube

Recent Posts

  • War Crimes in Sri Lanka – INTERNATIONAL CRISIS GROUP – NEW REPORT
  • Sri Lanka: New Evidence of Wartime Abuses – Human Right Watch
  • CWVHR welcomes UN Appointed Panel on Sri Lankan Human Rights Abuses – June 23,2010
  • Human Rights Day 2010
  • UN Report on Sri Lanka Conflict must be made Public – Amnesty International

Archives

  • October 2023
  • September 2023

Useful Links

  • British Institute of Human Rights
  • Amnesty International
  • Human Rights Watch
  • Asian Human Rights Commission
  • No Borders

Information Collection

Click on the Country below to get more details.

  • Australia
  • Belgium
  • Canada
  • Denmark
  • France
  • Germany
  • Italy
  • Netherlands
  • New Zealand
  • Norway
  • Sweden
  • Switzerland

If you live in a country not listed above, please contact us by email at dm@cwvhr.org or call us at 1-416-628-1408.

©2026 Centre for War Victims and Human Rights | WordPress Theme by SuperbThemes